31.7.14

திறல் மிகு



பெருவளியை 
ஈரம் தடவி 
வாடையாக்கு 

தாழ்வுக்கதவின் 
தாழ் 
திற  

எள்ளல்களை 
மதியாது 
மிதி 

நாசியில் 
நம்பிக்கை 
சுவாசி 

லட்சியத்தை 
பிரபஞ்சத்தில் 
கல 

உதிரத்தில் 
உழைப்பு குளோபின் 
சேர் 

வீழ்வை 
எழுந்து 
வாழ்வாக்கு 

எண் திசையிலும் 
உன் பெயர் 
பொறி 





No comments: