1)
எனக்கு பிடித்த
எனது கவிதைகள்
எதுவுமேயில்லை
விதை தூவிக்கொண்டு
இருக்கிறேன்
என்றோ முளைத்து
எவ்வாறேனும் பூத்து
என்றைக்காவது கனியும்போது
எனது மற்ற கவிதைகளும்
எனக்கு பிடித்துப்போகுமென்ற
நம்பிக்கையில் ,,,,,,,,,,,,,,,,,,,
2)
தயவு செய்து
நகங்களை வெட்டாதே
எனது மெய்யில்
அவையிடும் குறிகள்
உனது காமக்கையெழுத்து