14.10.13

ராஜா ராணி



1)

கவிதையின் 
முதல் வரியிலிருந்து
கடைசி வரிவரை
ஏதாவது இட்டு
நிரப்பினாலும்
அந்த ஏதாவதில்
நீ மட்டுமே
இருக்கிறாய் !!!!


2) 

திசையெட்டும்
கொடி பறந்த
ராஜாவிற்கு
துரித ஸ்கலிதம்

நிலவின்
விசும்பலில்
நீள்கிறது
ராணியின்
இரவுகள்........

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் அருமை.
ரசித்தேன்.